கண்கள், பளிச்செனவிருக்க தினமும் இரவில் விளக்கெண்ணையை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப்பகுதிகளில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும். அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும்.
கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் சேர்த்துத் தடவவேண்டும்.
உதடு
... மேலும் பார்க்க
உதட்டில் வெண்ணையுடன், தேங்காய் எண்ணையைத் தடவி வந்தால் உதடு காய்ந்து போகாமல் இருக்கும்.
முகம்
எண்¨ணைப் பசை இல்லாமல் சருமம் பளிச்சென இருக்க இதோ சில டிப்ஸ்:
முதலில் பால் ஏட்டை முகத்தில் தடவி, பஞ்சு மூலம் முகத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும்.
பப்பாளி, ஆப்பிள் கலந்து முகத்துக்கு 10 நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும்.
பிறகு துளசி, புதினா இலைகளுடன் தண்ணீரைக் கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும். (ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும்.)
ஒரு முட்டைக் கரு, எலுமிச்சம்பழச் சாறு, தயிர், கடலை மாவு, எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தப்படுத்தவும்
இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.
தலைமுடி
தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் எடுத்துத் தலையில் தேய்க்கவும். (பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணையில் கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும்.)
நன்றாக தலையை மசாஜ் செய்யவும்
10 நிமிடங்கள் ஊறிய பிறகு, மருதாணி, டீ-டிக்காஷன் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு பcக்-ஆகப் போடவும். (மருதாணி போடுவதால் முடியின் கலர் மாறாது. மருதாணி, டீ-டிகாஷன், தயிர் சேர்ந்த கலவையை இரவே ஊற வைத்துப் போட்டால்தான் முடி கலர் மாறும்.)
மருதாணி ஒத்துக் கொள்ளாதவர்கள் செம்பருத்தி இலையை உபயோகப் படுத்தலாம்.
இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் இருக்கும
பாதம்
பாதம் சுத்தமாகவும், மிருதுவாகவும் இருக்க தினமும் வெதுவெதுப்பான நீரில் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு கலந்து, குளிக்குமுன் 15 நிமிடங்கள் பாதத்தை அதில் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த தண்ணீரீல் சுத்தப்படுத்தவும்.
Tuesday, 25 May 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment