amazon associates

amazon associates

Pages

Thursday, 20 May 2010

மயங்காத..மனம்.. யாவும்.. மயங்கும்..! .


டீ செடி

டீயை சுவைத்தல் .. சீனாதான் .

பச்சை தேயிலை டீ .உடலுக்கு மிகவும் நல்லது .

சீனாவில் டீ தோட்டம்

"நீங்கள் குளிரை உணர்ந்தால்,இதமான் வெப்பம் தரும்; நீங்கள் சூடாக இருந்தால் உங்களை குளிர்விக்கும்; நீங்கள் மனச் சோர்வுடன் இருந்தால், உங்களை உற்சாகமூட்டும்,; நீங்கள் படபடப்பாக இருந்தால், உங்களை, அமைதிப்படுத்தும்".....வில்லியம் கிலாடுஸ்டோன்.
பானங்களின் மகாராணி தேநீர்தான். உலக மக்கள் தொகையில் 50 % க்கும் மேல் தேநீரை சூடாகவோ, குளிர்ச்சியாகவோ சுவைக்கின்றனர். நீருக்கு அடுத்த படியாக உலகின் பெரும்பாலான மக்களால் விரும்பி அருந்தப்படுவதும் தேநீர்தான். தேநீரின் வரலாறு மனித நாகரிகத்துடன் இணைந்தது. சுமார் 5000 ஆண்டுக்கால சரித்திரம் உடையது.இதன் கதை சுவாரசியமானது; எளிமையானதும் கூட. கி.மு.2737 ம் ஆண்டு முதன் முதலில் தேநீர் அருந்தியவர்கள் சீனர்கள்தான். அப்போது வாழ்ந்த ஷென்நுங் என்ற சீனப் பேரரசர், தனது வழிப்பயணத்தின் போது, களைப்பு மிகுதியால். ஒரு மரத்தின் கீழ் அமருகிறார். பணியாளை சுடு நீர் கொண்டு வர பணிக்கிறார். பணியாள் கொடுத்த சுடுநீரை, கையில் வைத்திருக்கும்போது, மரத்திலிருந்து, ஓர் இலை நீரில் விழுகிறது. . உடனே நீரின் நிறம் மாறுகிறது, வாசனையும் இருக்கிறது. சுவைத்துப் பார்க்கிறார். நீர் மனத்துடனும், சுவையுடனும் இருக்கிறது. அதுதான், கேமினேல்லா சைனன்சிஸ் என்ற வேதிப்பெயரால் அழைக்கப்படும்" டீ".
தேநீரை ஆசியா முழுவதும் பரப்பிய பெருமை புத்த பிட்சுக்களையே சேரும். கி.பி. 618 -907 ல் ஆண்ட டாஸ் வம்சத்தினர், தேநீரை சீனாவின் தேசிய பானமாக அறிவித்தனர்.800 களில் ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கிலாந்தில் கி.பி. 1657 ல் தாமஸ் கார்வே என்ற காபிக்கடைக்காரர்தான் முதன் முதலில், தேநீர் விற்பனை செய்தார். கி.பி. 1462 ல் இங்கிலாந்து மன்னர், இரண்டாம் சார்லஸ் , "காதரின் " என்ற போர்த்துகிசியப் பெண்ணை மணந்தார். தேயிலை அவரின் வரதட்சணைப் பொருளாக இங்கிலாந்து அரண்மனைக்குள் நுழைந்தது 1904ல் உலக வணிக பொருட்காட்சிக்கு வந்தது தேநீர். இன்ஸ்டன்ட் டீ 1940 ௦ களில் சந்தைக்கு வந்தது.
இந்தியாவில் டீ அறிமுகப்படுத்தப்பட்டதும் அப்போதுதான். புதிதாக தெருவுக்கு வந்த தேநீரை யாரும் குடிக்க வில்லை. எனவே, சென்னையில் மாலை நேரத்தின் போது, டீயை இலவசமாக வழங்கி , கூவி, கூவி கொடுத்தனர்.இந்தியாவின் பல பகுதிகளில், வீட்டின் கதவைத் தட்டிஇலவசமாக வழங்கியே டீயை மக்களிடம் அறிமுகப்படுத்தினர். முதலில் மக்கள் மறுத் தனர். பருகி பழகிய பின் தேநீரின் சுவைக்கும், மணத்திற்கும் அடிமையைனர் .. பிறகுதான். தேநீர் விலைக்கு விற்கப்பட்டது. அதன் பின் இன்று பாட்டாளியின் பானமாகியது.
--

ஆங்கிலம் பிறந்த கதை

ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக உள்ளது இன்று. இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர். மொத்தம் 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், தொடர்பாடல் (ஊடகம்), அரசியல் என எல்லாத்துறைகளிலும் இம்மொழியின் தாக்கம் பெரிதாக உள்ளது. ஏறத்தாழ 1500... மேலும் பார்க்க ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ - சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஓர் உலக மொழியாக இருக்கிறது.

பழங்கால ஆங்கிலம் (400 -1100)
கிபி 5 ம் நூற்றாண்டளவில் பிரட்டனை மூன்று ஜெர்மன் குழுக்கள் (ஆங்கில்சு, சாக்சன், யூட்) இன்றைய ஜெர்மன் / டென்மார்க் நிலப்பரப்பில் இருந்து ஆக்கிரமித்தன. இந்தக் குழுக்கள் தம்மிடையே புரிந்துக்கொள்ளக்கூடிய ஒத்த மொழிகளைப் பேசின. அப்போது அங்கு பேசப்பட்டு வந்த கெல்டிக் மொழிக் குழுக்கள் வடக்கேயும் மேற்கேயும் தள்ளப்பட்டன. "ஆங்கிலோ இனத்தவர்கள் “ஆங்லோ-லாந்து” எனும் பகுதியில் இருந்தே வந்தனர். இவர்கள் பேசிய மொழி "இங்கிலிசுக்" எனும் ஜெர்மன்மனிய மொழிக் குடும்பத்து மொழியாகும்.

இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து - இங்கிலிசு என்றானது."இக்காலத்திப் பேசப்பட்ட ஆங்கிலம் பழம் ஆங்கிலம் எனப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில ஆக்கங்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. தற்கால ஆங்கிலத்தின் பெரிதும் புழங்கும் 50 விழுக்காடு சொற்களுக்கு பழ ஆங்கில வேர்கள் உண்டு.
இடைக்கால ஆங்கிலம் (1100 - 1500)
பிரான்சின் நோர்மண்டி சிற்றரசின் மன்னன் வில்லியம் இங்கிலாந்தை 1066 கைப்பெற்றினான். இந்த புதிய ஆக்கிரமிப்பாளர்கள் நோர்மன் எனப்பட்டனர். இவர்கள் ஒரு வகை பிரான்சிய மொழியைப் பேசினர். அரச அவையிலும், வணிகத்திலும் பிரான்சிய மொழியே செல்வாக்கு பெற்றது. ஆட்சித் தொடர்புடைய உயர் பிரிவு மக்கள் பிரான்சிய மொழியையும், பொது மக்கள் அல்லது கீழ்ப் பிரிவு மக்கள் ஆங்கிலத்தையும் பேசினர். இக்காலத்தில் பல பிரான்சிய சொற்கள் ஆங்கிலத்துடன் கலந்தன. இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கியம் 'த கான்ட்டர்பர்ரி கதைகள் '(The Canterbury Tales) ஆகும். நோர்மன் ஆக்கிரமிப்புக்கு பின்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட முதல் அரச ஆவணம் 'ப்ரோவிஷன்ஸ் ஆஃப் ஆக்சுபோர்டு' (1258) (Provisions of Oxford ) ஆகும். 1362 ஆம் ஆண்டு எட்வர்ட்-3 என்னும் அரசன் முதன் முதலில் ஆங்கிலத்தில் நாடுளுமன்றத்தில் பேசினான். ஆங்கிலத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும்.

முன் தற்கால ஆங்கிலம் (1500 - 1800)
15 நூற்றாண்டின் இறுதியில் பெரும் உயிரெழுத்து மாற்றம் நிகழ்ந்தது. முதல் ஆங்கில அகராதி 1604 ஆண்டில் வெளியிடப்பட்டது. இக்காலப்பகுதிக்கு சற்று முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அச்சுத்தொழில்நுட்பத்தால் (1476... மேலும் பார்க்க) பல்வேறு நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவர தொடங்கின. பெரும்பான்மையான பதிப்பகங்கள் இருந்த இலண்டனின் வட்டார வழக்கு, தரப்படுத்தப்பட்ட ஆங்கிலமாக மருவியது. இக்காலத்தில் வாழ்ந்த ஷேக்ஸ்பியர் (1564-1616) ஆங்கிலத்தின் 30 மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். இவை ஆங்கிலத்தின் உயர்ந்த இலக்கியமாக இன்றுவரை கருதப்படுகிறது. 1702 முதல் ஆங்கில நாளிதழ் 'த டெய்லி கூரான் '(The Daily Courant) இலண்டனில் வெளியிடப்பட்டது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் 1768 - 1771 முதலில் வெளியிடப்பட்டது.
தற்கால ஆங்கிலம் (1800 - 2010)
1800களில் தொழிற்புரட்சி இடம்பெற்றது. பிரிட்டன் உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாறியது. பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின. 1922 பிபிசி ஒலிபரப்புச்சேவை தொடங்கி, ஆங்கிலத்தை பொதுமக்களிடம் எடுத்துசெல்ல உதவியது.

மேலும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது. ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது.

வானொலி, தொலைகாட்சி, இயங்குபடம், வரைகதை, இணையம் என பல்வேறு ஊடக தொழில்நுட்பங்கள் ஆங்கில உலகிலேயே முதலில் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றின் ஊடாக ஆங்கிலம் தன்னை மேலும் வேரூன்றிக் கொண்டது. எ.கா இணையம் இயங்கும் பல்வேறு நெறிமுறைகள் (Protocols), வலைத்தளங்கள் கட்டமைக்கப்படும் குறியீட்டு மொழிகள் (markup languagues), நிரல் மொழிகள் ஆகியவை ஆங்கிலத்திலேயே உள்ளன.

வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மொழிகள் அறிவியலின் மொழியாக இருந்து வந்துள்ளன. தொடக்கத்தில் இலத்தின், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளும் பின்னர் ஆங்கிலமும் ரஷிய மொழியும் அறிவியல் மொழிகளாக இருந்தன. இன்று ஆங்கிலமே தனிப் பெரும் அறிவியல் மொழியாக இருக்கின்றது. உலக அரசியலும், வணிகமும் இன்று பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகிறது.