அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
> - அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
> - அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
> - அசையாத மணி அடிக்காது
> - அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை. ... மேலும் பார்க்க
> - அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
> - அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
> - அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
> - அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
> - அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
> - அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து
> விடுவார்கள்.
> - அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
> - அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
> - அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை
> நீங்கும்.
> - அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
> - அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
> - அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
> - அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
> - அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
> - அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
> - அன்பே கடவுள்.
> - அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
> - அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
> - அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
> - அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
> - அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
> - அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
> - அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
> - அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
> - அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
> - அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
> - அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
> - அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
> - அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
> - அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
> - அதிக ஓய்வு அதிக வேதனை.
> - அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
> - அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
> - அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
> - அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
> - அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
> - அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
> - அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
> - அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
> - அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
> - அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
> - அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
> - அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
> - அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
> - அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
> - அரசனும் அன்னைக்கு மகனே.
> - அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
> - அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
> - அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
> - அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
> - அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
> - அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
> - அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
> - அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
ஆடிப்பட்டம் தேடி விதை.
> - ஆழம் தெரியாமல் காலை விடாதே!
> - ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
> - ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
> - ஆயுள் நீடிக்க உணவைக் குறை. ... மேலும் பார்க்க
> - ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
> - ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
> - ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
> - ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
> - ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
> - ஆறுவது சினம்.
> - ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
> - ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
> - ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
> - ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
> - ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
> - ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
> - ஆலை விழுது தாங்கியது போல.
> - ஆடு பகை குட்டி உறவா?
> - ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
> - ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
> - ஆரம்பத்தில் சூரத்துவம்.
> - ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
> - ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
> - ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
> - ஆற்றுநீர் பித்தம் போக்கும்
> குளத்து நீர் வாதம் போக்கும்
> சோற்றுநீர் எல்லாம் போக்கும்
> - ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.
> இ
> - இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
> - இளமையில் கல்.
> - இளங்கன்று பயமறியாது.
> - இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
> - இளமையில் கல். முதுமையில் காக்கும்.
> - இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
> - இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
> - இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
> - இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
> - இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
> - இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
> - இறங்கு பொழுதில் மருந்து குடி.
> - இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
> - இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
> - இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
> - இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
> - இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
> - இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
> - இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
> - இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
> - இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
> - இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
> - இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
> - இடுக்கன் வருங்கால் நகுக.
> ஈ.
> - ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
> - ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
> - ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
> - ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
> - ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு
- உழுத நிலத்தில் பயிரிடு.
> - உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
> - உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
> - உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
> - உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. ... மேலும் பார்க்க
> - உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
> - உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
> - உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
> - உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
> - உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
> - உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
> - உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
> - உழைத்து உண்பதே உணவு.
> - உப்பிட்டவரை உள்ளவும் நினை.
> - உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு
> ஊ
> - ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை
> இருக்கிறது.
> - ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
> - ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
> - ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
> - ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
> - ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
> எ
> - எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
> - எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு
> எட்டுப் பணியாரம்.
> - எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
> - எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
> - எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க
> விட்டுப் போகுமே விக்கல்.
> - எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
> - எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
> - எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே
> இருக்கும்.
> - எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
> - எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
> - எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
> - எண்ணம்போல் வாழ்வு.
> - எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
> ஏ
> - ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
> - ஏழை சொல் அம்பலம் ஏறாது.
> - ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
> - ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
> - ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன்
> படாதே!
> - ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
> ஐ
> - ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
> - ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?
> ஒ
ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
> - ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
> - ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
> - ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
> - ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ... மேலும் பார்க்க
> - ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
> - ஒழுக்கம் விழுப்பம் தரும்.
> - ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
> - ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
> - ஒத்தடம் அரை வைத்தியம்.
> - ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
> - ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
> ஓ
> - ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
> - ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
> - ஓடிப் பழகிய கால் நிற்காது.
> - ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.
> க
> - கண்ணுக்கு இமை பகையா?
> - கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
> - கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
> - கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
> - கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
> கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
> பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
> - கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
> - கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
> - கடுங்காற்று மழைக்கூட்டும்.
> கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
> - கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
> - கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
> - கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
> - கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
> - கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
> - கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
> - கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
> - கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
> - கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
> - கல்வி விரும்பு.
> - கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
> - கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன
> தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
> - கணக்கு எழுதாதன் நிலைமை.
> கழுதை புரண்ட இடம் மாதிரி.
> - கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
> - கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
> - கடலில் கரைத்த பெருங்காயம் போல.
> - கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
> - கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
> - கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
> - கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
> - கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
> - கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
> கா
> - காலம் போகும் வார்த்தை நிற்கும்.
> - கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
> - கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
> - கார்த்திகை கன மழை.
> - கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
> - கார்த்திகை கண்டு களம் இடு.
> - கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
> - காணிச் சோம்பல் கோடி நட்டம்.
> - காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
> - காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
> - காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
> - காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
> - காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
> - காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
> - காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
> - காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
> - கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
> - கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
> - கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
> - கார்த்திகை கால் கோடை.
கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
> கி
> - கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
> - கிட்டப் போயின் முட்டப் பகை.
> - கிட்டாதாயின் வெட்டென மற. ... மேலும் பார்க்க
> - கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
> - கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
> கீ
> - கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
> கு
> - குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
> - குருடனுக்கு ஒரே மதி.
> - குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
> - குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
> - குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
> - குதிரையும் கழுதையும் ஒன்றா?
> - குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
> - குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
> - குடி குடியைக் கெடுக்கும்.
> - குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
> - குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
> - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
> - கூழானாலும் குளித்துக் குடி.
> - கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
> - கூலிப் படை வெட்டுமா?
> - கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான். ... மேலும் பார்க்க
> கெ
> - கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
> - கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
> - கெடுவான் கேடு நினைப்பான்.
> - கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
> - கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
> கை
> - கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
> - கை பட்டால் கண்ணாடி.
> - கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
> கொ
> - கொடிக்கு காய் பாரமா?
> - கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
> கோ
> - கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
> - கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
> - கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும்
> காண்பது அரிது.
> - கோமளவல்லிக்கு ஒரு மொழி
> கோளாறுகாரிக்குப் பல மொழி
> - கோபத்திற்குக் கண்ணில்லை.
> கௌ
> - கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.
> ச
> - சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
> சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.
> - சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
> - சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
> சா
> - சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
> சி
> - சிறுதுளி பெருவெள்ளம்.
> - சிறு புண்ணையும், ஏழை உறவின்னையும் அலட்சியம் செய்யாதே.
> - சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
> - சித்திரை எள்ளைச்சிதறி விதை.
> - சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
> பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
> வைகாசி என்றால் வளர்வதும் இல்லை
> - சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
> - சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
> - சித்திரை மழை செல்ல மழை.
> சீ
> - சீரைத் தேடின் ஏரைத்தேடு
> சு
> - சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
> - சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
> - சுக்கைப் போல மருந்தில்லை.
> - சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
> - சுத்தம் சோறு போடும்.
> - சுற்றம் சூழ வாழ்
> - சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
> - சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
> சூ
> - சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
> - சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
> - சூதும் வாதும் வேதனை செய்யும்
> செ
> - செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
> - செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
> - செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
> சே
> - சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
> - சேற்றில் முளைத்த செந்தாமரை
> சோ
> - சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
> - சோம்பித் திரியேல.
> - சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?
> த
> - தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு?
> குடியாததை க்டது யாரு?
> - தண்ணீரே உணவகளின் அரசன்.
> - தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
> - பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
> - மனிதனுக்கச் சோதனை பெண்!
> - தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
> - தண்ணீரில் அடி பிடிக்கிறது.
> - தலை பகை, வால் உறவா?
> - தண்ணீர் வெந்நீரானாலும் நெருமப்பை அணைக்கும்.
> - தலைக்குத் தலை பெரிய தனம்.
> - தன் தப்பு பிறருக்குச் சத்து
> - தன் உயிர்போல் மண் உயிர் நினை.
> - தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
> - தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
> - தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
> - தன் கையே தனக்கு உதவி.
> - தர்மம் தலை காக்கும்.
> - தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
> - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தா
> - தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
> - தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
> - தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
> - தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம். ... மேலும் பார்க்க
> - தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
> - தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
> - தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
> - தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
> - தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
> - தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
> தி
> - திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
> - திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
> தீ
> - தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
> - தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
> து
> - துறவிக்கு வேந்தன் துரும்பு.
> - தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
> - துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
> - தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
> - துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
> - துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
> தூ
> - தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
> - தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
> - தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
> - தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
> - தூங்காதவனே நீங்காதவன்.
> - தூரமிருந்தால் சேர உறவு.
> தெ
> - தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
> - தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
> - தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
> - தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
> - தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
> - தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
> தை
> - தையல் சொல் கேளேல்.
> - தை பிறந்தால் வழி பிறக்கும்.
> தொ
> - தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
> ப
> - பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
> - பணம் பத்தும் செய்யும்.
> - பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
> - பணம் உள்ளவனுக்கு அச்சம்;
> - பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
> - பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
> - பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
> - பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
> - பல் போனால் சொல் போச்சு.
> - பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
> - பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
> - பங்குனி மாதம் பதர் கொள்.
> - பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
> - பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
> - படுக்க படுக்க பாயும் பகை.
> - பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
> - பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
> - பணம் பாதாளம் வரை பாயும்.
> பா
> - பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன். ... மேலும் பார்க்க
> - பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
> பி
> - பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
> - பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
> - பிச்சை புகினும் கற்கை நன்றே!
> - பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
> - பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
> பு
> - புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
> - புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
> - புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள
> முடியாது.
> - புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
> சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
> யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!
> - புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
> - புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத்
> திரும்பச் சொல்கிறார்கள்.
> - புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
> முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
> பூ
> - பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
> - பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
> - பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
> - பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
> பெ
> - பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
> ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.
> - பெண் என்றால் பேயும் இரங்கும்.
> - பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
> - பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
> சுவருக்கு மண்ணிட்டுப் பார்
> - பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
> பொ
> - பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
> - பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
> - பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
> அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;
> - பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு
> உண்ணும்.
> - பொறுமை கடலினும் பெரிது.
> - பொறுத்தார் பூமி ஆள்வார்.
> - பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
> - பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
> போ
> - போகும்போது புளியமரத்தடியில் போ
> - வரும்போது வேப்பமரத்தடியல் வா.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
> - நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
> - நன்றி மறவேல்.
> - நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
> - நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம். ... மேலும் பார்க்க
> - நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
> - நன்மைக்கு நன்மை செய்
> தீமைக்கு நன்மையே செய்
> - நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
> - நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
> - நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
> நா
> - நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
> - நாளை என்பது நட்டாற்று ஓடம்.
> - நாளை என்று ஒருநாள் உண்டா?
> - நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
> - நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
> - நாளும் அதிகாலையில் நீராடு.
> - நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
> நி
> - நிலையாமை ஒன்றே நிலையானது.
> நீ
> - நீலிக்கு கண்ணீர் இமையிலே.
> - நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
> - நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ
> எண்ணிப்பார்.
> நெ
> - நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
> - நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
> நொ
> - நொறுங்கத் தின்றால் நூறு வயது.
> - நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
> நோ
> - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
> ம
> - மனம் போல வாழ்வு
> - மனம் ஒரு குரங்கு
> - மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி
> - மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.
> - மனைவி வீட்டின் ஆபரணம்.
> - மனைவி சொல்லே மந்திரம்.
> - மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்
> - மனித நேயம் வளர்ப்பதே மதம்.
> - மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.
> - மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.
> - மதியாதார் வாசல் மிதியாதே!
> - மனசாட்சியை ஏமாற்றாதே!
> - மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத்
> தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.
> - மந்திரம் கால்; மதி முக்கால்.
> - மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
> - மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.
> - மனிதனின் அழகு அவன் நாக்கு.
மா
> - மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.
> - மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
> - மாசி பங்குனியில் கரும்பு ஆறு!
> - மாதா, பிதா, குரு, தெய்வம். ... மேலும் பார்க்க
> மி
> - மின்னுவதெல்லாம் பொன்னல்ல
> மீ
> - மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?
> மு
> - முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.
> - முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு
> - முன் வைத்த காலை பின் வைக்காதே!
> - முயன்றால் முடியாதது இல்லை.
> - முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
> - முயற்சி திருவினையாக்கும்.
> மூ
> - மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.
> - மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.
> - மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப்
> போகிறான்.
> மை
> - மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!
> வ
> - வட்டியோடு முதலும் போச்சு.
> - வளைகிற முள் நுழையாது.
> - வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.
> - வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த
> கொள்ளலாம்.
> - வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால்
> நடப்பது கஷ்டம்.
> - வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.
> - வண்டி வந்தால் வழி உண்டாகும்.
> - வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
> வா
> - வாய் உள்ளவன் உள்ளே.
> - வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!
> - வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
> - வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.
> - வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.
> - வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த
> தடுக்கு.
> - வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.
> கடந்த காலம் ஒரு கனவு
> வருங்காலம் ஒரு பெருமூச்சு
> - வாய் அரை வைத்தியன்.
> - வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்
> வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.
> வி
> - வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்
> - விரலுக்கேற்ற வீக்கம்.
> - விளையும் பயிர் முளையிலே தெரியும்
> வீ
> - வீணை கோணினும் நாதம் கோணுமா?
> வெ
> - வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.
> வே
> - வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டுவரும்.
Tuesday, 25 May 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment